பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:30 PM GMT (Updated: 9 Jun 2018 7:36 PM GMT)

உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை,

உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர்நீத்த மக்களின் குடும்பத்திற்கு நஷ்டஈட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையோரம் விவசாய நிலங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் எம்.கருப்புசாமி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஜோதிக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.ராமசாமி, துணை செயலாளர் பி.சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் சி.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் எம்.குணசேகரன், பொருளாளர் ஜி.செல்வராஜ், தலைவர் எம்.நந்தகோபால், இ.பி.எப். பென்சனர் சங்க செயலாளர் எம்.ஆறுமுகம் உள்பட பலர் பேசினார்கள்.


Next Story