எலிசபெத் ராணி செல்லாத நாடுகள்!


எலிசபெத் ராணி செல்லாத நாடுகள்!
x
தினத்தந்தி 16 Jun 2018 9:16 AM GMT (Updated: 16 Jun 2018 9:16 AM GMT)

இங்கிலாந்தின் எலிசபெத் ராணி, உலகில் மிகச் சில நாடுகளுக்கு மட்டும் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக நாடு களுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக இரண்டாம் எலிசபெத் மகாராணி கருதப்படுகிறார்.

தென் பசிபிக் தீவான வானாட்டு முதல் இஸ்லாமிய நாடான ஏமன் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் எலிசபெத் மகாராணி இதுவரை அர்ஜென்டினா நாட்டுக்குச் சென்றதில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிப்பது, 30 ஆண்டு களுக்கு முன்னர் துவங்கிய பாக்லாந்து போரை.

இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பாக்லாந்து மீது அர்ஜென்டினா 1982-ம் ஆண்டு படையெடுத்தது. தொடர்ந்து நடந்த கடுமையான எதிர்த் தாக்குதலுக்குப் பின் அத்தீவு மீட்கப்பட்டது.

ஆனால் அர்ஜென்டினா அந்தத் தீவுக்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதுடன், மால்வினாஸ் என்ற பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அழைத்து வருகிறது.

பாக்லாந்து போரில் 255 இங்கிலாந்து ராணுவத்தினரும், 3 பாக்லாந்து தீவுக்காரர்களும், 655 அர்ஜென்டினா ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், இங்கிலாந்து அரச குடும்பத்து வாரிசான இளவரசி ஆன் கடந்த 2013-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு விஜயம் மேற்கொண்டார். 14 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் இங்கிலாந்து அரச குடும்பத்து நபர் ஒருவர் அர்ஜென்டினா சென்றது அதுவே முதல்முறையாகும்.

கடந்த 2012-ம் ஆண்டு பாக்லாந்து தீவில் இளவரசர் வில்லியம் 6 வாரங்கள் தங்கியிருந்தபோது அவருக்கு எதிராக அர்ஜென்டினா மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா மட்டுமின்றி, பெரு, கொலம்பியா, ஈக்குவடார், உருகுவே, பொலிவியா, வெனிசுலா, சூரினாம், பராகுவே போன்ற நாடுகளுக்கும் எலிசபெத் ராணி சென்றதில்லையாம். 

Next Story