‘உருகும் சாலை’யால் அவதியுறும் ஓட்டுநர்கள்!


‘உருகும் சாலை’யால் அவதியுறும் ஓட்டுநர்கள்!
x
தினத்தந்தி 13 July 2018 9:45 PM GMT (Updated: 12 July 2018 10:06 AM GMT)

ஆஸ்திரேலியால் சாலை தார் உருகி டயர்களில் ஒட்டிக்கொண்டதால் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

வாகனங்களின் டயர்கள் மட்டுமின்றி, பம்பர் கம்பிகள் மற்றும் பிற அடிப்பாகங்களிலும் தார் ஓட்டிக்கொண்டுவிட்டது.

குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

‘‘இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. இதுபற்றிய தகவல்கள் வரத் தொடங்கியவுடன் என்னால் நம்ப முடியவில்லை’’ என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா கூறினார்.

வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், சமீபத்தில் புதிதாகப் போடப்பட்ட தார் சாலை சேதம் அடைந்துள்ளது.

பல குளிரான நாட்களையும், மழையையும் தொடர்ந்து நிலவிவரும் சூடான வானிலையால், பெரிய உருளை உருவில் தார் கார் சக்கரங்களில் ஒட்டிக்கொண்டது என்று உள்ளூர்வாசியான டெபோரா கூறினார்.

அவர் மேலும், ஒரு வார காலமாகவே ஒழுங்கான வானிலை நிலவவில்லை. சூரிய வெப்பம் அதிகரித்தபோது, வாகனங்களில் தார் ஒட்டத் தொடங்கியது என்று தெரிவித்தார்.

இவ்வாறு தார் ஒட்டிவிட்டதால் பல வாகனங்களை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. அவற்றின் டயர்களை மாற்ற வேண்டியதாயிற்று. மேலும் கார்களின் பம்பர் மற்றும் பிற பகுதிகளும் தாரால் சேதமடைந்தன.

கேன்ஸ் நகருக்குத் தெற்கில் உள்ள ஆத்தர்டன் டேபிள்லாண்ட்சில் அமைந்துள்ள இச்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

வாகனங்கள் சேதமடைந்த ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று குயின்ஸ்லாந்தின் போக்குவரத்து மற்றும் பிரதான சாலைகளுக்கான துறை அறிவித்திருக்கிறது. 

Next Story