திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவர் சிக்கினார்


திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவர் சிக்கினார்
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 8:16 PM GMT)

திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பெண்களிடம் மோசடி

மும்பை விக்ரோலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிவந்தார். இதில், அவருக்கு சைலேஷ் (வயது37) என்பவர் அறிமுகம் ஆனார். பெண்ணும், அந்த நபரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் ஒருநாள் அந்த பெண் சைலேசின் பான் கார்டை பார்த்தார். அப்போது அதில் அவருடைய பெயர் சவுர்யா சாவந்த் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் அவரிடம் விசாரித்தபோது, அவரது உண்மையான பெயர் சவுர்யா சாவந்த் என்பதும், ஆனால் அவர் சைலேஷ் என கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.

மேலும் அவர் இதேபோல திருமண தகவல் மையத்தில் போலி தகவல்கள் மூலம் பல பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.

ரூ.2 லட்சம் மோசடி

இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் சவுர்யா சாவந்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், சவுர்யா சாவந்த் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் தேடும் ஆதரவற்ற பெண்களிடம் பழகுவார். பின்னர் அவர் அந்த பெண்களை திருமணம் செய்து அவர்களுடைய நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகி விடுவார்.

கடைசியாக அவர் ஒரு பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story