ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது


ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 5 Aug 2018 11:14 PM GMT (Updated: 5 Aug 2018 11:14 PM GMT)

மூன்றடைப்பு அருகே, ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

திசையன்விளை,



நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் அந்தோணி நில்சன்ராஜ். இவருடைய மனைவி வினிதா (வயது 25).

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவ வலி காரணமாக நேற்று திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மூன்றடைப்பு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது வினிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலையோரத்தில் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் வினிதாவும், அவரது குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி மற்றும் டிரைவர் கல்யாணசுந்தரம் ஆகியோரை டாக்டர்கள் பாராட்டினர். 

Next Story