வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் சாவு


வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் சாவு
x
தினத்தந்தி 19 Oct 2018 9:45 PM GMT (Updated: 19 Oct 2018 9:25 PM GMT)

வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தான்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளையம்பட்டி மாணிக்கவாசகநகரை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. அவருடைய மகன் பரத்குமார் (வயது 14). இவன், காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தோட்டத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவன், பின்னர் வீடு திரும்பவில்லை. தனது மகன் காணாமல் போது குறித்து சரவணன் கூம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பரத்குமாரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு அருகே விவசாயி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் பரத்குமார் பிணமாக மிதப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பரத்குமாரின் உடலை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story