கீழ்வேளூர் ஒன்றியத்தில் அதிகாரி ஆய்வு
கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
கீழ்வேளூர்,
பசுமை வீடுகள் கட்டும் பணி, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை நாகை மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் சங்கர் ஆய்வு செய்தார். தொடர்ந்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வடக்காலத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது. இதில் 600 மரக்கன்றுகளை திட்ட இயக்குனர் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வடக்காலத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நக்கீரன், பணி மேற்பார்வையாளர்கள் சரவணன், செல்வம், ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story