தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் விற்க உரிமம் பெறுவது கட்டாயம் கலெக்டர் ஷில்பா தகவல்


தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் விற்க உரிமம் பெறுவது கட்டாயம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2018 9:32 AM GMT (Updated: 3 Nov 2018 9:32 AM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்ய உரிமம் பெறுவது கட் டாயம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்ய உரிமம் பெறுவது கட் டாயம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

உரிமம் கட்டாயம்

தீபாவளி பண்டிகை மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தரமான மூலப்பொருட்கள்

சுவீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப்பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச் சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண் டும்.

புகார்களுக்கு...

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வா கத்துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 9444042322 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story