மத்திகிரி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி
மத்திகிரி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலியானாள்.
மத்திகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள குருபட்டி மசூதி தெருவை சேர்ந்தவர் சர்தார். இவருடைய மகள் அலியா (வயது 3½). சம்பவத்தன்று சிறுமி அலியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் உயரமான கட்டிடத்தில் இருந்து அவள் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அலியாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிறுமி அலியா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து மத்திகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள குருபட்டி மசூதி தெருவை சேர்ந்தவர் சர்தார். இவருடைய மகள் அலியா (வயது 3½). சம்பவத்தன்று சிறுமி அலியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் உயரமான கட்டிடத்தில் இருந்து அவள் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அலியாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிறுமி அலியா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து மத்திகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story