மதுகுடிக்க பணம் தர தாய் மறுத்ததால் மனவேதனை: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


மதுகுடிக்க பணம் தர தாய் மறுத்ததால் மனவேதனை: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 6:44 PM GMT)

திருவாரூரில் மதுகுடிக்க பணம் தர தாய் மறுத்ததால் மனவேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் விஜயபுரம் திலகர் முதல் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப். இவருடைய மகன் அக்பர் பாஷா (வயது 17). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இவர் மதுகுடிப்பதற்கு தனது தாய் ஹஜிதாபேகத்திடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு பணம் தர மறுத்து கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அக்பர் பாஷா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story