திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 8:27 PM GMT)

திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர்் முருகேசன். விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி லதா (வயது 38). நேற்று அதிகாலை முருகேசன் வீட்டின் முன் பக்க சுவர் திடீரென்று இடிந்து வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த முருகேசன் மற்றும் அவருடைய மனைவி லதா ஆகியோர் மீது விழுந்தது. இதில் அந்த இடத்திலேயே லதா தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த முருகேசன் திருவாரூர்் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர்் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து 3 பேரும், மரங்கள் முறிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன்் உள்பட 2 பேரும், கொட்டகை சரிந்ததில் 2 வயது சிறுவன் ஒருவனும், மரம் விழுந்த அதிர்ச்சியில் ஒருவர் உள்பட ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று லதா இறந்தததையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story