இன்சூரன்ஸ், வங்கி பணிக்கான எழுத்து தேர்வுக்கு பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது


இன்சூரன்ஸ், வங்கி பணிக்கான எழுத்து தேர்வுக்கு பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது
x
தினத்தந்தி 13 Dec 2018 10:45 PM GMT (Updated: 13 Dec 2018 5:38 PM GMT)

இன்சூரன்ஸ், வங்கி பணிக்கான எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது.

திருச்செந்தூர், 

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்தவிருக்கிறது.

இந்த தேர்வு பற்றிய விவரங்களை www.new-i-n-d-ia.co.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 21 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கு கணிதம், காரணமறிதல், பொது அறிவு ஆகிய பிரிவுகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்து 500 ஆகும்.

நிர்வாக அலுவலர் எழுத்து தேர்வுக்கான பயிற்சி மற்றும் வங்கி கிளார்க் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது.

சிவந்தி அகாடமியில் பயிற்சி பெற்ற பலர் வங்கி மற்றும் அரசு துறைகளில் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல்நாளான வருகிற 27-ந் தேதி அன்று விடுதியில் நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3 ஆயிரத்து 500-க்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி - ஐ.ஓ.பி. - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி தூத்துக்குடி ரோடு திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது.

மேற்கண்ட தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். தொலைபேசி எண்: 04639-242998, அலைபேசி எண்: 9442055243, 8682985148.

Next Story