குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 11:27 PM GMT)

குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நம்பியூர், 


நம்பியூர் அருகே உள்ள எல்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 52). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. மேலும் குடிப்பழக்கத்தையும் கைவிட முடியவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் தோட்டத்துக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார்.

இதுகுறித்து வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த கல்யாணசுந்தரத்துக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

Next Story