காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்


காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2019 10:00 PM GMT (Updated: 17 Jan 2019 1:53 PM GMT)

பொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

நெல்லை,

பொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு குடும்பத்தோடு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். 

இதனால் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாபநாசம் காரையாறு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதி, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, குற்றாலம், அடவிநயினார் அணை பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள மக்கள் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் அறிவியல் மையத்தில் குவிந்தனர். 2–வது நாளான நேற்று அறிவியல் மையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் அறிவியல் மையத்தில் குவிந்ததையொட்டி அண்ணா சாலையில் பஸ்கள், வாகனங்கள் செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.


Next Story