வேதாரண்யம் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு


வேதாரண்யம் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 6 March 2019 10:15 PM GMT (Updated: 6 March 2019 7:23 PM GMT)

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் அப்பு. இவருடைய மனைவி அஞ்சம்மாள் (வயது60). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கி மோட்டார் சைக்கிள் சென்றது. இதில் அஞ்சம்மாள் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அஞ்சம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவருடைய மகன் சிங்காரவேல்(38) வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story