ஆரோவில் அருகே, நேபாள தொழிலாளி மர்ம சாவு


ஆரோவில் அருகே, நேபாள தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 7:27 PM GMT)

ஆரோவில் அருகே நேபாளத்தை சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

விழுப்புரம்,

நேபாளம் நாட்டில் உள்ள பரிதியா பகுதியை சேர்ந்தவர் தேவ்லால்தாரு மகன் சோம்பார்சாத் சவுத்ரி (வயது 38). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடியில் தனியாக வீடு எடுத்து தங்கி அங்குள்ள சிமெண்டு கற்கள் தயாரிக்கும் தொழில் கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் சோம்பார்சாத் சவுத்ரி தனது வீட்டிற்கு சென்று படுத்து தூங்கினார். ஆனால் நேற்று வெகு நேரமாகியும் அவர் வேலைக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர் ராம்குமார் சவுத்ரி (33) என்பவர் சென்று பார்த்தபோது அங்கு வீட்டினுள் சோம்பார்சாத் சவுத்ரி மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சோம்பார்சாத் சவுத்ரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதாக அவரது உறவினர் ராம்குமார் சவுத்ரி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story