தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2019 10:45 PM GMT (Updated: 8 March 2019 5:40 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் உதயசூரியன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

உதயசூரியன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நோய் சரியாகாத விரக்தியில் மனமுடைந்த உதயசூரியன், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 5-வது மாடிக்கு சென்றார். அங்கு கழிவறையில் உள்ள தண்ணீர் குழாயில் துண்டால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story