சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 4:11 PM GMT)

காஞ்சிக்கோவில் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெருந்துறை, 

காஞ்சிக்கோவில் அருகே கரங்கரடு என்ற இடத்தில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் ரோட்டை ஆக்கிரமித்தப்படி பாறைகள் மற்றும் வீட்டின் சுவர் இருந்தன. 

இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்றது. இதன்காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று அங்கு வந்தனர். 

பின்னர் கரங்கரடியில் உள்ள வளைவில் சாலையோரத்தில் இருந்து பாறைகள் மற்றும் வீட்டின் சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story