தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 11 Jun 2019 9:30 PM GMT (Updated: 11 Jun 2019 12:30 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் 

அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு, அம்மா திட்ட சிறப்பு முகாமை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தி வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதன்படி தூத்துக்குடி தாலுகா சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீமூலக்கரை கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா உடன்குடியிலும், சாத்தான்குளம் தாலுகா பழங்குளத்திலும், கோவில்பட்டி தாலுகா கோவில்பட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா ஜமீன்செங்கல்படை கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா சோழபுரத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா காட்டுநாயக்கன்பட்டியிலும், கயத்தாறு தாலுகா சரவணாபுரம் கிராமத்திலும், ஏரல் தாலுகா வாழவல்லானிலும் முகாம் நடக்கிறது.

கோரிக்கை மனுக்கள் 

இந்த முகாம்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. எனவே மக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story