வேப்பனப்பள்ளி அருகே டிராக்டர் டிரைலர் கவிழ்ந்து டிரைவர் பலி 5 பேர் படுகாயம்


வேப்பனப்பள்ளி அருகே டிராக்டர் டிரைலர் கவிழ்ந்து டிரைவர் பலி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 5:34 PM GMT)

வேப்பனப்பள்ளி அருகே டிராக்டர் டிரைலர் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது22). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று தாசிரிப்பள்ளியில் இருந்து செங்கல் பாரம் ஏற்றி சென்றார். இதில் அதேபகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் முனியப்பன் மற்றும் 4 பெண்கள் என 5 பேர் சென்றனர். இவர்கள் செங்கல்லை இறக்கி விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

ராமசந்திரம் கிராமம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் டிராக்டர் டிரைலர் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் ஜெயகுமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிராக்டரில் சென்ற முனியப்பன் (32) மற்றும் இவருடன் வந்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஜெயகுமாரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story