மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 8:24 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்னவாசல்,

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் சென்றனர். அப்போது ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story