4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 8:31 PM GMT)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பையா (வயது 63). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி அதே ஊரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 4 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் பாப்பையாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் பாப்பையாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து பாப்பையாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story