பெரியநாயக்கன்பாளையம் அருகே, கார் மோதி 2 மூதாட்டிகள் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் மோதி 2 மூதாட்டிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெ.நா.பாளையம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்தநெ.4 வீரபாண்டி அம்மன் கோவில்வீதியை சேர்ந்தவர்நடராஜன். இவருடையமனைவி சரஸ்வதி, (வயது 70). இவர் சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியில்பட்டத்தரசியம்மன்கோவில் வீதியை சேர்ந்தராமசாமி என்பவரின் மனைவி அங்காத்தாள் (61),கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பெரியநாயக்கன்பாளையம்வாரச்சந்தைக்குகாய்கறிகளை கொண்டு சேர்ப்பதற்காகவீரபாண்டி-சாமநாயக்கன்பாளையம்ரோட்டில்பஸ்சுக்காக காத்துஇருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்துதாறுமாறாக சென்றுசாலையோரம்பஸ்சுக்காக காத்துஇருந்த சரஸ்வதி மற்றும் அங்காத்தாள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்துஉயிருக்கு போராடிக்கொண்டுஇருந்த 2 மூதாட்டிகளையும்அப்பகுதிமக்கள்மீட்டு பெரியநாயக்கன்பாளையம்அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்குஅவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்சிகிச்சை பலனின்றிஅங்காத்தாள் பரிதாபமாக இறந்தார். சரஸ்வதிமேல்சிகிச்சைக்காககோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்தாமரைக்கண்ணன்என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story