பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை


பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 8:51 PM GMT)

திண்டுக்கல், நிலக்கோட்டையில் பெரியார் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, தி.மு.க., ம.தி.மு.க., திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பெரியார் முகமூடி அணிந்து குமரன் பூங்காவில் இருந்து பெரியார் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் ஜெயன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி, தந்தை பெரியார் தி.க. மாவட்ட தலைவர் சம்பத், ம.தி.மு.க. சார்பில் செல்வேந்திரன், தியாகு, தேசிய ஒருமைப்பாட்டு மாநில தலைவர் அப்துல் ஜபார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற திராவிடர் கழகத்தினர் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போதுராஜன், நகர செயலாளர் திருப்பதி, மக்கள் விடுதலை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சக்திசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர், வத்தலக்குண்டு

வேடசந்தூரில் தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நிறுவன தலைவர் பகவத்சிங் பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைப்பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திராவிடர் கழகம், திராவிட இயக்கம், தமிழர்பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி சமத்துவபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையிலான நிர்வாகிகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழ்மாறன், வளவன், தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story