குன்றத்தூர் அருகே தொழிற்சாலை மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் சாவு


குன்றத்தூர் அருகே தொழிற்சாலை மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் சாவு
x
தினத்தந்தி 18 Sep 2019 10:30 PM GMT (Updated: 18 Sep 2019 5:36 PM GMT)

குன்றத்தூர் அருகே தொழிற்சாலை முதல்மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தங்கி வெல்டிங் வேலை செய்து வந்தவர் சரவணன் என்ற மணி (வயது 27). சேலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் அவர் தொழிற்சாலை முதல்மாடியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடன் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story