வானூர் அருகே கார் விபத்தில் டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்


வானூர் அருகே கார் விபத்தில் டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:00 PM GMT (Updated: 29 Sep 2019 2:05 PM GMT)

வானூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைகாக புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் லியோ. கார் டிரைவர். நேற்று பகலில் இவரது காரில் திண்டிவனத்தை சேர்ந்த 3 பேர் புதுவைக்கு செல்ல வேண்டும் எனகூறினர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு புதுவை நோக்கி லியோ வந்தார்.

 திண்டிவனம் 4 வழி பாதையில் கார் மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது.காட்ராம்பாக்கம் மெயின் ரோட்டில் கார் வந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லியோ பிரேக் பிடிக்கமுயன்றார். அதற்குள் கார் அந்த மாட்டின் மீது மோதியது. மேலும் நிலைதடுமாறி சாலையில் எதிரில் வந்த ஒரு கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் லியோ பலியானார். மேலும் காரில் அடிபட்ட மாடும் பலியானது.

 இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் நேரில் கண்டதும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்தவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Next Story