அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 8:39 PM GMT)

திருப்பூரில் அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் தனியார் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அடகு கடையின் உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இந்த தகராறு காரணமாக அவரது சகோதரர் அடகு கடைக்கு பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றுள்ளார். இதனால் நேற்று காலை அடகு கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு அடகு வைத்த நகையை மீட்க வந்த பொதுமக்கள் அடகு கடை முன்பு காத்திருந்தனர்.

இந்நிலையில் அடகு கடை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந் தனர். அப்போது சகோதரர்களுக்கிடையே சொத்து தகராறு காரணமாக கடை பூட்டப்பட்ட சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக தங்கள் நகையை மீட்டு தர வேண்டும் எனக்கோரி மத்திய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடகு வைத்தவர்களுக்கு அவர்களது நகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story