நாகர்கோவில் அருகே தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறி 5 மாத குழந்தை சாவு


நாகர்கோவில் அருகே தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறி 5 மாத குழந்தை சாவு
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 7:16 PM GMT)

நாகர்கோவில் அருகே தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறி 5 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உச்சம்பாறை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 24), தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (22). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதீப் என்ற ஆண் குழந்தை பிறந்தது.நேற்று காலையில் நந்தினி, குழந்தை பிரதீப்புக்கு பால் கொடுத்து விட்டு படுக்க வைத்து விட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.

பரிதாப சாவு

அப்போது, குழந்தை அசைவற்ற நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, நந்தினியும் அவரது கணவரும் சேர்ந்து குழந்தையை தூக்கிக் கொண்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறி 5 மாத குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story