தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்


தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 5:09 PM GMT)

தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் ரத்னா திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். 

அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காரீப்பருவ நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அரியலூர் தாலுகா தூத்தூர் மற்றும் உடையார்பாளையம் தாலுகா கோடாலிக்கருப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். 

அப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மண்டல மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரன், வேளாண்மை அலுவலர் வடிவேல், தாசில்தார் கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் பொன்பகவதிராஜ் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story