கோட்டக்குப்பம் அருகே, வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது


கோட்டக்குப்பம் அருகே, வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2020 10:00 PM GMT (Updated: 30 Jan 2020 7:32 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவுவிநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு வேனை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வேனுக்குள் 1,920 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் காலனி பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் மோகன் (வயது 29) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு வேனில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து டிரைவர் மோகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேனையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story