கோவையில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது


கோவையில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 9 Feb 2020 9:45 PM GMT (Updated: 10 Feb 2020 12:48 AM GMT)

கோவையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போத்தனூர்,

கோவையில் உள்ள ஒருஅரசு பள்ளியில்கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ முகாம் நடந்தது. அப்போதுஅப்பள்ளியில்பிளஸ்-1 படிக்கும் 16 வயதுமாணவி தனக்குஉடலில் பல்வேறு மாற்றங்கள் உள்ளதாக அங்கு வந்தநர்சு விடம்தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தமாணவியை பரிசோதனைசெய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்குவருமாறுநர்சுகூறி உள்ளார். இதையடுத்து அரசுஆஸ்பத்திரிக்கு சென்றமாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 6மாத கர்ப்பிணியாகஇருப்பதுதெரியவந்தது.

இதுகுறித்தபுகாரின் பேரில் அனைத்து மகளிர்போலீசார்விசாரணை நடத்தினார்கள். விசாரணையில்,க.க.சாவடியை சேர்ந்தகூலித்தொழிலாளிவெள்ளியங்கிரி(வயது 35) என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாணவி கழிவறைக்குசென்றபோதுஅவரை பின்தொடர்ந்து சென்று மிரட்டி பாலியல்பலாத் காரம் செய்ததுதெரியவந்தது.

அதன் பின்பு அவர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பலமுறை தனியாகஅழைத்து சென்றுபாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால்மாணவி கர்ப்பம்அடைந்ததும்தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வௌ்ளியங்கிரியைபோலீசார்போக்சோசட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரைமதுக்கரைகோர்ட்டில்ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில்அடைத் தனர்.

Next Story