வயிற்று வலியால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, வயிற்று வலியால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, சிற்பி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ரேவதி (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதையறிந்த அவரது உறவினர் உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரேவதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, சிற்பி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ரேவதி (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதையறிந்த அவரது உறவினர் உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரேவதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story