தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:45 PM GMT (Updated: 13 Feb 2020 7:14 PM GMT)

தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் பேசும் போது கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 தொடர்பான பணிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. ஏற்கனவே பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் தாசில்தார் நம்பிராஜன், வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story