சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் திடீர் தீ; பசு கருகி செத்தது
சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து பசு கருகி பரிதாபமாக செத்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது அத்திமுகம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (வயது 38). விவசாயி. இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். முனிகிருஷ்ணப்பா வசித்து வரும் குடிசையின் அருகில் அவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் இந்த மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மாட்டு கொட்டகையில் இருந்த 4 மாடுகளும் கத்தின. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் உள்ளே புகுந்து அங்கு கட்டப்பட்டிருந்த 3 மாடுகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பசு செத்தது
மேலும் தீயில் சிக்கிய பசுவை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மாட்டு கொட்டகையில் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் கொட்டகை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதில் தீயில் உடல் கருகி பசுமாடு பரிதாபமாக செத்தது. மாட்டு கொட்டகையின் மேலே சென்ற மின்சார வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது அத்திமுகம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (வயது 38). விவசாயி. இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். முனிகிருஷ்ணப்பா வசித்து வரும் குடிசையின் அருகில் அவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் இந்த மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மாட்டு கொட்டகையில் இருந்த 4 மாடுகளும் கத்தின. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் உள்ளே புகுந்து அங்கு கட்டப்பட்டிருந்த 3 மாடுகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பசு செத்தது
மேலும் தீயில் சிக்கிய பசுவை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மாட்டு கொட்டகையில் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் கொட்டகை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதில் தீயில் உடல் கருகி பசுமாடு பரிதாபமாக செத்தது. மாட்டு கொட்டகையின் மேலே சென்ற மின்சார வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story