ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு


ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு
x
தினத்தந்தி 3 May 2020 4:38 AM GMT (Updated: 3 May 2020 4:38 AM GMT)

ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு.

ஜோலார்பேட்டை,

ஏலகிரி மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கடந்தசில நாட்களாக ஏலகிரி மலையில் உள்ள செடி, கொடிகள், மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து வருகின்றனர். ஏற்கனவே 3 முறை தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இரவு 7 மணியளவில் மண்டலவாடி அருகே உள்ள ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். அந்தத் தீ சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. ஏலகிரி மலைக்கு தீ வைக்கும் மர்மநபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story