கடையம் அருகே, அட்டகாசம் செய்த கரடி பிடிபட்டது


கடையம் அருகே, அட்டகாசம் செய்த கரடி பிடிபட்டது
x
தினத்தந்தி 13 Jun 2020 10:49 PM GMT (Updated: 13 Jun 2020 10:49 PM GMT)

கடையம் அருகே தோட்டங்களில் அட்டகாசம் செய்த கரடி பிடிபட்டது.

கடையம்,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரகம் பங்களாகுடியிருப்பு, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், கல்யாணிபுரம், சிவசைலம் மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கரடி புகுந்து தேங்காய், சப்போட்டா மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட்டு அட்டகாசம் செய்து வந்தது.

இதையடுத்து கரடியை பிடிக்க முதலியார்பட்டியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதன்படி முதலியார்பட்டியை சேர்ந்த மகபூப்பாபு என்பவரது தோட்ட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று முன்தினம் இரவு கரடி பிடிபட்டது.

தகவல் அறிந்ததும் அம்பை துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத்துறை கால்நடைத்துறை மருத்துவர் மனோகரன், ஆய்வாளர் அர்னால்டு, உயிரிலாளர் ஸ்ரீதரன், கடையம் வனச்சரக அலுவலர் நெல்லை நாயகம், முண்டந்துறை வனச்சரக அலுவலர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து வந்தனர். பிடிபட்ட கரடியை கூண்டுடன் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச் சென்று அடர்்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதேபோல் கடந்தமுறை பங்களாகுடியிருப்பு வனச்சரக அலுவலக இடத்தில் 2 கரடிகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story