பெரியார் சிலை அவமதிப்பு: இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது
பெரியார் சிலை அவமதிப்பு: இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பெரியார் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த தி.மு.க. மற்றும் வி.சி.க.வினர் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரியார் சிலையை அவமதித்தது திருக்கோவிலூர் செவலை ரோட்டில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மணி (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பெரியார் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த தி.மு.க. மற்றும் வி.சி.க.வினர் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரியார் சிலையை அவமதித்தது திருக்கோவிலூர் செவலை ரோட்டில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மணி (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story