செங்கம் அருகே 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


செங்கம் அருகே 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2020 6:39 PM GMT (Updated: 30 Nov 2020 6:39 PM GMT)

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கபடுவதாகவும், இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக செங்கம் அருகே பெரும்பட்டம் கிராமத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டெல்லியில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி வேளாண் சட்டங்களில் திரும்ப பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Next Story