வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
x

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவையாறு,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர்கள் மகாதேவன், அமர்சிங், ராஜேந்திரன், அறிவழகன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வக்கீல் ராஜ், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஷாஜகான், நகர தலைவர் பசுபதிராஜா உள்பட 62 பேர் ஏர் கலப்பையுடன் திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

62 பேர் கைது

தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்ரவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீசார் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்த 62 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் பேசினர். தொ.மு.ச. பேரவை செயலாளர் சேவியர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டம் நடந்தபோது மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story