- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி ஏரிக்குள் கவிழ்ந்தது

x
தினத்தந்தி 31 Jan 2021 1:30 AM GMT (Updated: 2021-01-31T07:00:27+05:30)


உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி ஏரிக்குள் கவிழ்ந்தது
உளுந்தூர்பேட்டை,
சேலத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 43) லாரியை ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புறவழிச் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலை ஓரத்தில் உள்ள ஏரிக்குள் கவிழ்ந்தது. இதில் மகேந்திரன் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரியின் டேங்கரில் இருந்து வெளியேறிய டீசல் ஏரி முழுவதும் பரவி இருப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.
விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் எலவனாசூர்கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire