சிக்கரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சிக்கரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Feb 2021 11:22 PM GMT (Updated: 2 Feb 2021 11:22 PM GMT)

சிக்கரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது சிக்கரசம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட ராமபையனூரில் பழங்குடியின பொதுமக்களுக்கு பசுமை வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட பழங்குடியின பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் ஒன்றிய தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் பார்த்திபன் தலைமையில் பழங்குடியின பொதுமக்கள் சிக்கரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அப்துல் வகாம், பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘வீடு கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story