சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்


சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
x
தினத்தந்தி 8 Feb 2021 3:16 AM GMT (Updated: 8 Feb 2021 3:18 AM GMT)

சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே சின்னகண்ணணூரில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்திற்கு ஊரின் மையப்பகுதியில் இருந்து தனியாக மின்கம்பங்கள் வழியாக மின்சப்ளை சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஒரு மின் கம்பம் வயல்வெளியில் சாய்ந்து விட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்சப்ளையை மட்டும் துண்டித்து விட்டு மின்கம்பத்தை அப்படியே விட்டு சென்று விட்டனர். இதனால் மயானத்தில் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய போகும் போது மின்சார வசதி இல்லாததால் இருளில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. இதுகுறித்து சின்னகண்ணணூர் ஊராட்சி தலைவர் அங்குச்சாமி கூறுகையில், மின்கம்பம் சாய்ந்து கிடப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் வயல்வெளியில் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பம் கிடப்பதால் விவசாயம் செய்ய முடியாமலும், மின்சாரம் இல்லாததினால் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யவும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக கூறினார்.

Next Story