சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு


சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2021 7:59 PM GMT (Updated: 13 Feb 2021 7:59 PM GMT)

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி இறந்தார்

திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகள் வெள்ளம்மாள் மைக்குடியில் வசித்து வருகிறார். மூதாட்டி ஆதிலட்சுமி சமைத்துக் கொண்டிருந்தபோது இவருடைய சேலையில் தீப்பிடித்தது. 
இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் மூதாட்டி அலறினார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த ஆதிலட்சுமி பலனின்றி இறந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story