பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆப்பக்கூடல் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்
ஆப்பக்கூடல் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1 மாணவி
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் எட்டிகுட்டைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சுப்பாத்தா. இவர்களுடைய மகள் கோதைநாயகி (வயது 17). இவர் ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கோதைநாயகி கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பழனிசாமியும், சுப்பாத்தாவும் வேலைக்கு சென்றுவிட்டனர். கோதைநாயகியின் தங்கை ஹரிணிஸ்ரீயும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டார். கோதைநாயகி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து ஹரிணிஸ்ரீ மாலை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுபற்றி அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சோகம்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கோதைநாயகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story