கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 22 Feb 2021 6:37 PM GMT (Updated: 22 Feb 2021 6:37 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்

நொய்யல்
நொய்யல் அருகே வேலம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு கிணற்றுக்கு ஆடுகளுக்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார்.அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் துரைசாமியை கிணற்றுக்குள் காணவில்லை. இறந்த நிலையில் துரை சாமி உடல் கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்று விட்டது. அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் இறங்கி துரைசாமியின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story