வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமயம், பிப்.24-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முத்தரையர் சங்கத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரி திருமயத்தில் வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரங்கலிங்கம் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அமைப்பாளர் பொன்னை கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் மீசை பாண்டியன், இணை அமைப்பாளர் மதியழகன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அறந்தாங்கி அண்ணாசிலை அருகே வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முத்தரையர் சங்கத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரி திருமயத்தில் வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரங்கலிங்கம் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அமைப்பாளர் பொன்னை கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் மீசை பாண்டியன், இணை அமைப்பாளர் மதியழகன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அறந்தாங்கி அண்ணாசிலை அருகே வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story