மதுரையில் புதிதாக 14 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியையும், 3 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் சிகிச்சையில் இருந்து நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 4 பேர் நகர் பகுதியையும், ஒருவர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 743 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகாரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story