விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு


விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 3 March 2021 9:03 PM GMT (Updated: 3 March 2021 9:03 PM GMT)

சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

சுரண்டை, மார்ச்:
சுரண்டை அருகே உள்ள அண்ணாமலை புதூர் கிராமத்தில் இருந்து கடந்த 18-ந் தேதி முதல்-அமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் பங்கு பெற ஒரு வேனில் வந்தனர். வேன் சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலைபுதூரை சேர்ந்த சம்முத்தான் (வயது 70) நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த 2-ந் தேதி வீட்டிற்கு வந்த சம்முத்தான் நேற்று அதிகாலையில் இறந்தார்.

Next Story