ஆர்.கே.பேட்டை அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி சாவு


ஆர்.கே.பேட்டை அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி சாவு
x
தினத்தந்தி 4 March 2021 5:58 AM GMT (Updated: 4 March 2021 5:58 AM GMT)

ஆர்.கே. பேட்டை அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளிக்க சென்றார்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு கோமதி (9) என்ற மகளும், புருஷோத்தமன் (7) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் சித்ரா துக்கம் விசாரிக்க உறவினரின் கிராமத்திற்கு சென்று விட்டார். குணசேகரன் தனக்கு சொந்தமான ஆடுகளை பார்த்து கொள்ளும்படி தனது மகன், மகளிடம் சொல்லி விட்டு வேறு வேலையாக சென்றுவிட்டார். இந்த நிலையில் கோமதி தனது தம்பி புருஷோத்தமனுடன் அந்த கிராமத்தில் இருந்த ஏரியில் குளிக்க சென்றார்.

சாவு

அப்போது ஏரியில் மூழ்கி கோமதி, புருஷோத்தமன் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story