தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டமாக வந்து அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு மற்றும் தென்னை மரத்தை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் கரும்பு பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தங்கள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அனவன் குடியிருப்பு பகுதியில் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story